×

கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி பீகாரில் 80 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும், அதனை பருகும் நபர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கிழக்கு சம்பரண் மாவட்டம் துர்குலியா, பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த பலர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கள்ளச் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேர் பலியாகினர். இதுகுறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் மோதிஹாரி, பஹர்பூர், துர்குலியா, ஹர்சுத்தி, சுகவுலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற 20 பேர், மேலும் கிழக்கு சம்பரண் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் உள்பட 80 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 11 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி பீகாரில் 80 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Dinakaran ,
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...